5 நாட்கள் வேலை மணிப்பூர் அரசு அறிவிப்பு| Dinamalar

இம்பால்-மணிப்பூர் மாநிலத்தில் அரசு அலுவலகங்கள், வரும் 1ம் தேதி முதல், வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், பா.ஜ., ஆட்சியை தக்கவைத்தது; முதல்வராக பீரேன் சிங் மீண்டும் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:அரசு அலுவலகங்கள் ஏப்., 1ம் தேதியிலிருந்து, திங்கள் முதல் வெள்ளி வரை ஐந்து நாட்கள் மட்டுமே இயங்கும். அதேபோல் அரசு பள்ளிகளும் ஐந்து நாட்கள் மட்டுமே இயங்கும்.இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.