முல்லைத்தீவு வீராங்கனைக்கு ,இந்திய குத்துச்சண்டை போட்டியில் தங்கம்

இந்தியாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட யுவதி யோகராசா நிதர்சனா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

INTERNATIONAL BRAVE BOXING COUNCIL  நடாத்தும் சர்வதேச குத்துச்சண்டை போட்டி நேற்று முன்தினம் (26), சென்னையில் நடைபெற்றது. இதில் இலங்கை மற்றும் இந்திய அணியினர் கலந்துகொண்டனர்.
இலங்கை அணி வீரர்கள் சார்பாக  வவுனியா மாவட்டத்தை சேர்ந்த T.சிறீதர்சன் T.நாகராஜா ஆகிய இரண்டு வீரர்களும், முல்லைத்தீவை சேர்ந்த E.கிருஸ்ணவேணி, Y.நிதர்சனா ஆகிய இரண்டு வீராங்கனைகளும் பங்குபற்றினர்.
நான்கு மாணவர்களில் மூவர் தங்கப் பதக்கத்தையும் மற்றும் ஒருவர்  வெள்ளி பதக்கத்தையும் பெற்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கைவேலி மருதமடு பகுதியில் வசிக்கும் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் யோகராசா நிதர்சனா என்ற யுவதியே, தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து நாட்டிற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும்  பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.