இ-பைக் எரிந்து நாசம்

திருவொற்றியூர்: அம்பத்தூரை சேர்ந்தவர் கணேஷ் (21). திருவொற்றியூரில் உள்ள டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று வழக்கம் போல் தனது இ-பைக்கில் வேலைக்கு புறப்பட்டார். மாதவரம் 200 அடி சாலையில் மஞ்சம்பாக்கம் அருகே சென்றபோது, பைக் இன்ஜினில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால், கணேஷ் பைக்கை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் பைக் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அந்த வழியாக சென்ற குடிநீர் லாரியை நிறுத்தி, அதில் இருந்து தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனர். அதற்குள் இ-பைக் முற்றிலுமாக எரிந்து நாசமானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.