சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியில் மாற்றமில்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி- ‘புதிய நிதியாண்டின் முதல் காலாண்டில், சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை’ என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

latest tamil news

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:புதிய நிதியாண்டு இன்று துவங்குகிறது. இதில், ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில், என்.எஸ்.சி., எனப்படும் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம், பி.பி.எப்., எனப்படும் பொது சேமநல நிதி திட்டம் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டியில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

latest tamil news

என்.எஸ்.சி.,க்கு ௬.௮ சதவீதம்; பி.பி.எப்.,புக்கு 7.1 சதவீதம் வட்டி தொடர்ந்து வழங்கப்படும். ஒரு ஆண்டுக்கான சேமிப்பு திட்டத்துக்கு 5.5 சதவீத வட்டியும், பெண் குழந்தைகளுக்கான ‘சுகன்யா சம்ரீதி’ சேமிப்பு திட்டத்துக்கு 7.4 சதவீத வட்டியும் வழங்கப்படும். முதியோருக்கான ஐந்து ஆண்டு சேமிப்பு திட்டத்துக்கு வழங்கப்படும் 7.4 சதவீத வட்டி தொடரும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.