தமிழகத்தில் 24 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு அமல்

தமிழகத்தில் 27 சுங்கச்சாவடிகளில் 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை உயர்த்தப்பட்ட சுங்க கட்டணம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்ததுடன், கட்டணத்தையும் திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன.

இவற்றை உபயோகிப்பாளர்களுக்கான கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ந்தேதி 24 சுங்கச்சாவடிகளுக்கும், செப்டம்பர் 1-ந்தேதி 21 சுங்கச்சாவடிகளுக்கும் உயர்த்தப்படுகிறது. அந்தவகையில், 24 சுங்கச்சாவடிகளில் உபயோகிப்பாளர்கள் கட்டணம் இன்று முதல் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.