பிரிட்டன் அமைச்சருடன் ஜெய்சங்கர் பேச்சு| Dinamalar

புதுடில்லி : பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் லிஜ் டிராசுடன், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், உக்ரைன் விவகாரம் உட்பட, பல்வேறு பிரச்னைகள் பற்றி பேசினார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் லிஜ் டிராஸ், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று டில்லியில் சந்தித்தார். இருவரும், ரஷ்யா – உக்ரைன் போர், இருநாட்டு உறவுகள் உட்பட, பல்வேறு பிரச்னைகள் பற்றி ஆலோசித்தனர்.

‘உக்ரைன் மீது, ரஷ்யா நடத்தி வரும் போரால், உலகின் அமைதியும், பாதுகாப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாடுகள் ஒன்று சேர்ந்து, சர்வதேச பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்’ என, ஜெய்சங்கரிடம் டிராஸ் வலியுறுத்தினார்.

பின், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்த, கடந்த ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட, ௨௦௩௦ம் ஆண்டுக்கான தொலை நோக்கு திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி இருவரும் ஆலோசித்தனர்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.