BB Ultimate: பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் சுருதி! எவ்வளவு லட்சம் தெரியுமா?

பிக் பாஸ் அல்டிமேட் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. இறுதி போட்டியில் நிரூப், பாலா, தாமரை, அபிராமி, ஜூலி, ரம்யா பாண்டியன், சுருதி இருந்த நிலையில் தற்போது பதினைந்து லட்சம் பணப் பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார் சுருதி.

பிக் பாஸ் சுருதி

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்ட சுருதி சீக்கிரமே அந்த வீட்டில் இருந்து வெளியேறினார். அதற்கு தாமரையுடன் நடந்த பிரச்னையே காரணம் எனவும் பேசப்பட்டது. அதன் பிறகு பிக் பாஸ் அல்டிமேட்டிற்குள் போட்டியாளராகக் களம் இறங்கிய சுருதி, “கடந்த முறை என்னுடைய விளையாட்டை நன்றாக விளையாடவில்லை. அதனால், இந்த முறை நிச்சயம் என் திறமையை காட்டுவேன்” எனக் கூறியிருந்தார். அதன்படி அதிக நாள்கள் தாக்குப்பிடித்திருக்கிறார். கிட்டத்தட்ட இறுதிவாரம் வரை அவரின் பயணம் இருந்திருக்கிறது.

வழக்கம்போல, போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியவுடன் பிக் பாஸ் வைக்கும் அந்தப் பணப்பெட்டி டாஸ்க் அரங்கேறியிருக்கிறது. ஆனால், வித்தியாசமாக அதற்காக போட்டிகளும் நடத்தப்பட்டன. அதில் தற்போது பணப் பெட்டியுடன் சுருதி வெளியேறும் புரொமோ வெளியாகியிருக்கிறது. சுருதியும், ஜூலியும் பதினைந்து லட்சத்தை எடுப்பதற்காக போட்டி போட்டதில் அதிக சுற்றில் சுருதி வெற்றி பெற்றிருக்கிறார். அதையடுத்து இன்று பிக் பாஸ் வீட்டிலிருந்து பதினைந்து லட்சம் பணப் பெட்டியுடன் சுருதி வெளியேறியிருக்கிறார்.

சுருதி

மீதம் இருக்கும் ஆறு பேரில் யார் வெற்றி வாகையை சூடப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதில் உங்களின் சாய்ஸ் யார்? கமென்ட்டில் சொல்லுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.