தோட்டத்து வீட்டில் கட்டிடலில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த தாய், மகன்

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தாயும், மகனும் நள்ளிரவில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

.குருக்களையன்பட்டியை சேர்ந்த செல்வம், அதே பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் விவசாய வேலையை முடித்துவிட்டு தாய் சௌந்தரம்மாளுடன் தோட்டத்து வீட்டிலேயே தங்கியுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை இருவரும் கட்டிலில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு சடலங்களாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை கைப்பற்றிய போலீசார் தடயவியல் நிபுணர்கள், மோப்பநாயை வரவழைத்தும் கொலையாளிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.