ஷாங்காய் நகரில் அதிகரிக்கும் கொரோனா; கட்டுப்பாடுகள் தீவிரம்| Dinamalar

ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அங்கு கட்டுப்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.

சீனாவின் ஷாங்காய் நகரில் 26 லட்சம் மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது ஒமைக்ரான் புதிய ரக வைரசால் தாக்கப்பட்டுள்ள இந்த நகரத்தில் வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடுமையான ஊரடங்கு பின்பற்றப்படுவதால் கடந்த இரண்டு நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது ஷாங்காய் சர்வதேச எக்ஸ்போ சென்டர் வளாகம் தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு புதிய நோயாளிகளுக்காக 15 ஆயிரம் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியில் குடியிருக்கும் குடிமக்கள் நியூக்ளிக் அமில பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.