மீண்டும் முழு ஊரடங்கை நோக்கி இந்தியா – பிரதமர் மோடி திடீர் முடிவு?

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு நேற்றைய பாதிப்பை விட இன்று சற்று அதிகரித்து உள்ளது.

இந்தியாவில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இதன் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதை அடுத்து, கொரோனா இரண்டாவது அலை, மூன்றாவது அலை இந்தியாவில் பரவியது.

கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை, கடந்த ஜனவரி மாத இறுதியில் இருந்து இந்தியாவில் குறையத் தொடங்கியது. இதை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதற்கிடையே நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளை நேற்றுடன் விலக்கிக் கொள்வதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் இன்று, இந்தியாவில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 1,225- ஐ விட அதிகமாகும். நேற்று 28 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில் இன்று மட்டும் 52 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், உயிரிழப்பும் அதிகரித்து வருவது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கொரோனா பரவல் நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இந்தியாவில், வரும் ஜூன் மாதத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் நான்காவது அலை பரவக் கூடும் என, ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்திதமிழில் பேனர்.. பெரும் மகிழ்ச்சியில் கெஜ்ரிவால்.. “விசில்” அடித்த ஸ்டாலின்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.