திருவள்ளூரில் போக்குவரத்து காவலர்களுக்கு தொப்பி, கூலிங் கிளாஸ், ஒளிரும் மேலங்கி வழங்கிய காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்.!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே போக்குவரத்து காவலர்களுக்கு ஒளிரும் மேலங்கி, வெயிலிலிருந்து காக்கும் தொப்பி, கூலிங் கிளாஸ் உள்ளிட்டவற்றை ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வழங்கினார். பின்னர் அவர்களுடன் இணைந்து ஆணையர் செல்ஃபி புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

முன்னதாக, மீஞ்சூர் அடுத்துள்ள வடசென்னை அனல்மின் நிலையம் அருகே கனரக வாகனங்கள் செல்வதை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள உயர்தடுப்பு அரணை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் திறந்து வைத்தார்.

இதை தொடர்ந்து மீஞ்சூர், வடசென்னை பகுதிகளில் முக்கியமான 3 சாலைகளில் குற்றசம்பவங்களை தடுக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராக்களின் செயல்பாட்டையும் அவர் தொடங்கி வைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.