25 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இல்லை… தமிழகத்தில் இன்று 32 பேருக்கு கொரோனா…

இரண்டாண்டுகளாக தொடர்ந்து வந்த பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் நாடுமுழுவதும் இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது.

மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில் தமிழகத்தில் இன்று 27,914 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 16 ஆண்கள் 16 பெண்கள் என மொத்தம் 32 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் மொத்தம் 293 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 25 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று ஏதும் இல்லை,

சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 3 பேருக்கும், செங்கல்பட்டு, கூடலூர், கோவை, தூத்தூக்குடி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், தஞ்சாவூர், மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.