திண்டுக்கல்லில் ஆசைக்கு இணங்க மறுத்த தம்பியின் மனைவி மற்றும் குழந்தையை எரித்து கொலை செய்த கொடூரன் கைது.!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தம்பி மனைவியை தீவைத்து எரித்துக் கொலை செய்த கொடூரனை போலீசார் கைது செய்தனர். 

பெரியமலையூர் வலசை சேர்ந்த சிவக்குமார்- அஞ்சலை தம்பதியினருக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் அஞ்சலை தனியாக ஆடு மேய்க்கச் செல்வதை நோட்டமிட்டு வந்த சிவகுமாரின் சகோதரர் கருப்பையா, அவரைப் பின்தொடர்ந்து சென்று தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால் அஞ்சலை மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த கருப்பையா அவரையும் அவரது 2 வயது குழந்தையையும் இரக்கமின்றி கத்தியால் தாக்கி, தீ வைத்து எரித்துக் கொலை செய்துள்ளான். இதுதொடர்பான புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் கருப்பையா தான் கொலையாளி என்பதை அறிந்து அவனை கைது செய்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.