தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது.

மேலும், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டையில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை எனவும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 6-ந் தேதி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக் கூடும் எனவும், இதன் தாக்கத்தால் 7-ந் தேதி தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.