வேலூர் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளருக்கு சொந்தமான வங்கி லாக்கரில் சோதனை ; கணக்கில் வராத நகைகள் சிக்கியுள்ளதாக தகவல்

வேலூர் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளருக்கு சொந்தமான வங்கி லாக்கரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் கணக்கில் வராத பல சவரன் நகை சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் லஞ்ச புகாரில் சிக்கிய வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணைப்பதிவாளராக பணியாற்றிய ரேணுகாம்பாள் என்பரிடம் இருந்து கணக்கில் வராத 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தற்போது கடலூர் செம்மண்டலம் பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் ரேணுகாம்பாளுக்கு சொந்தமான 2 லாக்கர்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.