ஐநா. மனித உரிமைக் குழுவில் இருந்து ரஷ்யாவை நீக்க இன்று வாக்கெடுப்பு

உக்ரைன் மீதான போர் நீடித்து வரும் நிலையில், ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்குவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

உக்ரைன் நகரான புச்சாவில் ஏராளமான அப்பாவி மக்களை ரஷ்யப்படையினர் கொன்று குவித்த தகவல் வெளியான நிலையில், ரஷ்யாவை மனித உரிமைக் குழுவில் இருந்து நீக்க வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் கோரி வருகின்றன. 47 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்குவது தொடர்பாக ஐநா.பொது சபையில் இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இந்த வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவுடன் நட்புறவு கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் தவிர்க்கும் என்று கூறப்படுகிறது.

ரஷ்யாவை மனித உரிமைக் கவுன்சிலில் இருந்து நீக்கினால் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நியுயார்க்கில் உள்ள ரஷ்யாவுக்கான தூதர் வசிலி நெபன்சயா கூறியுள்ளார். இதனிடையே, ரஷ்யாவுக்கு எதிராக ஐநா சபை கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.