இனி விஜய் ரசிகர்களை கையில் பிடிக்கமுடியாது..வெளியான தகவலால் குஷியில் ரசிகர்கள்..!

விஜய்
நடிப்பில் உருவான
பீஸ்ட்
திரைப்படத்தை பற்றிதான் எங்கு திரும்பினாலும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. அந்த அளவிற்கு படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. படத்தை பார்த்து ரசிக்க ஆவலாக இருக்கும் விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம், படத்தில் என்ன குறை இருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவே படத்தை பார்க்க துடிக்கும் சிலர் மறுபக்கம் என படத்தை காண அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல சாதனைகளை படைத்த வருகின்றது. தமிழ் நாட்டில் பல திரையரங்குகளில் பீஸ்ட் படத்தின் முன்பதிவு துவங்கியது. முன் பதிவு துவங்கிய சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டும் விற்று தீர்ந்தன.

சிம்பு படத்தினால் சினிமாவை விட்டு விலகினேன்..பகிர் கிளப்பிய பிரபல நடிகை..!

எனவே முன்பதிவுன் மூலமே படம் வெளியாகாமல் பல கோடி லாபம் பார்த்துள்ளது பீஸ்ட் திரைப்படம். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவிலும் பீஸ்ட் சாதனைப்படைத்துள்ளது.

பீஸ்ட்

அதாவது கேரளாவில் மலையாள நடிகர்களை தவிர பிற மொழி நடிகரான விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு ஒரு மல்டிப்ளக்ஸ் திரையரங்கில் ஒரே நாளில் 50 காட்சிக்கு மேல் திரையிடப்படவுள்ளது. இந்த தகவல் சினிமா வட்டாரங்களில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்

இந்நிலையில் வெளிநாடுகளிலும் பீஸ்ட் படத்தின் முன்பதிவு அமோகமாக உள்ளது. முதல்முறையாக ஜெர்மனி நாட்டில் பீஸ்ட் படத்திற்கு 13 காட்சி நேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு தமிழ் படத்திற்கு ஜெர்மன் நாட்டில் இந்த அளவிற்கு காட்சி நேரங்களை ஒதுக்கியுள்ளது இதுவே முதல்முறை.

எனவே ஜெர்மனியில் பீஸ்ட் திரைப்படம் ஒரே நாளில் 13 காட்சிகள் திரையிடப்படும். இந்த தகவல் விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

BEAST தமிழகத்திலும் தடையா? – வலுக்கும் கோரிக்கைகள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.