இந்தியாவில் புதிய வைரஸ் இல்லை | Dinamalar

மும்பை,:மிக வேகமாக பரவக் கூடிய, உருமாற்றம் அடைந்த ‘ஒமைக்ரான் எக்ஸ் இ’ வைரஸ் பாதிப்பு, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் கண்டறியப்பட்டது என்ற தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.
நம் நாட்டில், இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக இருந்த கொரோனா பரவல், தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதனால், கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.இந்நிலையில், அதிவேகமாக பரவக்கூடிய, உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசான ஒமைக்ரான் எக்ஸ் இ வகை, முதல் முறையாக மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் கண்டறியப்பட்டதாக மும்பை பெருநகர மாநகராட்சி கூறியிருந்தது.
தென் ஆப்ரிக்காவில் இருந்து, பிப்., 10ல் மும்பை வந்த ஒரு பெண்ணுக்கு, மார்ச் 2ல் நடத்திய பரிசோதனையில், அவருக்கு ஒமைக்ரான் எக்ஸ் இ வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.ஆனால், இந்த தகவலை மறுத்துள்ள மத்திய அரசு, இந்தியாவில் ஒமைக்ரான் எக்ஸ் இ வகை தொற்று இல்லை என்றும் கூறியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.