மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்குடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு

புதுடெல்லி,
தமிழக கவர்னர் ஆர்என் ரவி, மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று டெல்லி சென்றுள்ளார். இதையடுத்து அவர் டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் தமிழகம் சார்ந்த விஷயங்கள் குறித்தும், இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதன்பின் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனது டெல்லி சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட முக்கிய மந்திரிகளை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.