ஆந்திராவில் ஜெகன் அரசில் 24 அமைச்சர்கள் ராஜினாமா

திருமலை: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் 2019ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல்வராக ஜூன் 8ம் தேதி பதவியேற்றார். அப்போது அவருடன் 24 அமைச்சர்கள் பதவியேற்றனர். இவர்கள் இரண்டரை ஆண்டுகளுக்கு பணியாற்றுவார்கள், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என ஜெகன் மோகன் தெரிவித்திருந்தார். அதன்படி, புதிய அமைச்சர்களை நியமிக்க உள்ளதாக கடந்த வாரம் ஜெகன் மோகன் தெரிவித்தார். இந்நிலையில், நேற்று அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் 24 அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஜெகன் மோகனிடம் வழங்கினர். இவர்களுக்கு பதிலாக விரைவில் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.