தேசிய கூடைப்பந்து போட்டி: தமிழக அணிகள் கால்இறுதிக்கு தகுதி

சென்னை,
71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் 5-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 2-வது கட்ட லீக் சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 87-63 என்ற புள்ளி கணக்கில் மத்தியபிரதேசத்தை தோற்கடித்தது. 

லீக் சுற்று முடிவில் இந்தியன் ரெயில்வே, அசாம், கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு, பஞ்சாப் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன. இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் தமிழக அணி, பஞ்சாப்பை (மாலை 4 மணி) சந்திக்கிறது.
அதே சமயம் ஆண்களுக்கான 2-வது கட்ட லீக் சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 85-74 என்ற புள்ளி கணக்கில் இந்தியன் ரெயில்வேயை சாய்த்து தொடர்ச்சியாக 5-வது வெற்றியை தனதாக்கியது. 
லீக் சுற்று முடிவில் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், உத்தரகாண்ட், சர்வீசஸ், இந்தியன் ரெயில்வே, கர்நாடகா, அரியானா அணிகள் கால்இறுதியை எட்டின. கால்இறுதி ஆட்டத்தில் தமிழக அணி, கேரளாவை (இரவு 7.15 மணி) எதிர்கொள்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.