பி.யூ.,சி தேர்வுக்கும் சீருடை கட்டாயம்; ஹிஜாப் அணிந்து வந்தால் அனுமதி இல்லை| Dinamalar

பெங்களூரு-”இரண்டாம் ஆண்டு பி.யூ.சி., தேர்வுக்கும், சீருடை கட்டாயம். ‘ஹிஜாப்’ அணிந்து வந்தால், தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்,” என தொடக்க, உயர்நிலைப்பள்ளி கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் தெரிவித்தார்.பெங்களூரில், அவர் நேற்று கூறியதாவது:ஏப்ரல் 22 முதல் மே 18 வரை, இரண்டாம் ஆண்டு பி.யூ., தேர்வு நடக்கவுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி.,யை போன்றே, இரண்டாம் ஆண்டு பி.யூ., தேர்வும் நடக்கும். ஹிஜாப் அணிந்து வந்தால், தேர்வு மையத்துக்குள் அனுமதி கிடைக்காது.கல்வித்துறை பிறப்பித்த உத்தரவை, பின்பற்றுவது கட்டாயம். சீருடையில் தேர்வெழுத வேண்டும். கர்நாடகாவின், 90 சதவீதம் கல்லுாரிகளில் சீருடை உள்ளது. 10 சதவீதம் கல்லுாரிகளில் மட்டும், சீருடை இல்லை.இத்தகைய கல்லுாரிகளில், மதம் சார்ந்த உடையணிந்து வரக்கூடாது. அந்தந்த கல்லுாரிகளின் உத்தரவுகளை, பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.