ஆந்திராவில் அமைச்சரவையை மாற்றியமைக்க 24 அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா.!

ஆந்திராவில் அமைச்சரவையை மாற்றியமைக்க வசதியாக, 24 அமைச்சர்களும், தங்கள் ராஜினாமா கடிதங்களை முதலமைச்சர் ஜெகன்மோகனிடம் அளித்தனர். 

ஆட்சி அமைத்து 3 ஆண்டுகள் கடந்த நிலையில், அமைச்சரவையை மாற்றியமைக்க அவர் முடிவு செய்துள்ளார். இதில், புதுமுகங்கள் பலருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றும், ஐந்து துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையொட்டி அமராவதியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 24 அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்தனர். புதிய அமைச்சர்களின் பட்டியல் ஆளுநரிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டு, 11 ஆம் தேதி பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.