முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகி கைது

முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

அப்போது, இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பா.ஜ.க. நிறுவன நாள் நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட பிரசார அணி தலைவர் ஜெயப்பிரகாஷ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நள்ளிரவில் ஜெயப்பிரகாஷை கைது செய்ய சென்றனர். அப்போது அங்கு திரண்டிருந்த ஆதரவாளர்கள், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  நான்கு மணிநேர பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஜெயபிரகாஷை போலீசார் கைது செய்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.