நடிகர் எஸ்.வி.சேகர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்.!

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்டதாக வழக்கில், நடிகர் எஸ்.வி.சேகர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

பாஜக பிரமுகர் நடிகர் எஸ்வி சேகர், பெண் பத்திரிக்கையாளர் குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பகிர்ந்த விவகாரம் தொடர்பாக, சென்னை காவல்துறை போலீசார் முன் ஆஜராக வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இதனையடுத்து அண்மையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை போலீசார் முன்பு நடிகர் எஸ்வி சேகர் ஆஜராகி விளக்கமளித்து இருந்தார். 

இந்நிலையில், இன்று நடிகர் எஸ்.வி.சேகர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரியும் நடிகர் எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.