தமிழகத்தில் 780 கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிப்பு.. அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

மிழகத்தில் 780 கூட்டுறவு சங்கங்களில் 482 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அவர், கூட்டுறவு சங்கங்களில் நான்காயிரத்து 816 கோடி ரூபாய்க்கான நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 37 ஆயிரம் பேருக்கான நகைக்கடன்கள் விரைவில் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.