ஹிந்துக்கள் அதிக குழந்தை பெறணும் ; சாமியார் நரசிங்கானந்த் அடுத்த லகலக!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

”ஹிந்துக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ளத் தவறினால், இந்தியாவில் ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்து விடும்,” என சர்ச்சை சாமியார் யதி நரசிங்கானந்த் எச்சரித்து உள்ளார்.

latest tamil news

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, காஜியாபாத் தஸ்னா கோவிலின் தலைமை பூஜாரியான யதி நரசிங்கானந்த் கூறியதாவது:கணிதவியல் அடிப்படையில், 2029ல் இந்திய பிரதமராக ஹிந்து அல்லாத ஒருவர் தான் பதவியேற்பார். அதன் பின், 20 ஆண்டுகள் கழித்து, ஹிந்துக்கள் குறைவாக உள்ள நாடாக இந்தியா மாறி விடும்.

latest tamil news

அதனால் ஹிந்துக்கள் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். இது குறித்து ஹிந்துக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மதுராவில் ஆக.,12 -14ல் ஹிந்து தர்ம மாநாடு நடத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார். கடந்த வாரம் டில்லியில் நடந்த ஹிந்து மாநாட்டில், ‘முஸ்லிம் ஒருவர் இந்திய பிரதமரானால், அடுத்த, 20 ஆண்டுகளில் 50 சதவீத ஹிந்துக்கள் மதம் மாற்றப்பட்டு விடுவர்’ என, நரசிங்கானந்த் பேசினார்.

‘இத்தகைய சூழலை தடுக்க ஹிந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும்’ எனவும் சாமியார் பேசியது சர்ச்சையை கிளப்பியது.கடந்த ஆண்டு ஹரித்துவாரில் முஸ்லிம்களுக்கு எதிராக பேசியதற்காக நரசிங்கானந்த் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்துஉள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.