மும்மொழிகளில் பதாகைகளுடன் கொழும்பின் முக்கிய பகுதியில் திரண்ட மக்கள் (Video)


கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த போராட்டத்தில் கத்தோலிக்கர்கள் கலந்து கொண்டு அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 

போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மும்மொழிகளில் கோட்டாபய அரசிற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கி தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

இதேவேளை கோட்டாபய அரசுக்கு எதிராகவும், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு நீதி கோரியும் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி இன்று நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்குள்ளான நீர்கொழும்பு கடுவாப்பிட்டிய கத்தோலிக்க தேவாலயத்திலிருந்து கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் வரை இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை ஆகிய பகுதிகளையும் முடக்கி அரசுக்கு எதிராக இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gallery

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.