தூத்துக்குடியில் செவிலியருக்கு பாலியல் தொல்லை தந்த மருத்துவர் கைது.!

தூத்துக்குடியில் செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் மருத்துவர்  கைது செய்யப்பட்டார்.

தனியார் சிறுநீரக சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த மனுவில், தாம் பணியாற்றி வரும் மருத்துவமனையின் நிறுவனர் சுப்பிரமணியன் தம்மை  அவரது வீட்டுக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த புதுக்கோட்டை போலீஸார் சுப்பிரமணியனை கைது செய்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்டதாக அவர் கூறியதால், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.