உக்ரைனில் பலியானவர்கள் குறித்த சரியான எண்ணிக்கையை வெளியிடும் ஐநா.,| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நியூயார்க்: உக்ரைனில் பலியானவர்கள் குறித்த சரியான எண்ணிக்கையை ஐநா., வெளியிட உள்ளது.

latest tamil news

உக்ரைன்- ரஷ்யா போர் தொடர்ந்து 45 நாட்களைத் தாண்டி நடைபெற்ற வண்ணம் உள்ளது. இந்தப் போரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட குடிமக்கள், இருதரப்பு இராணுவ வீரர்கள் ஆகியோர் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

உக்ரைன் அரசு மரணமடைந்தவர்கள் குறித்து அளிக்கும் தகவல் மற்றும் ரஷ்ய அரசு அளிக்கும் தகவல் வெவ்வேறு விதமாக உள்ளன. இதனையடுத்து ஐநா மனித உரிமை ஆணையம் இது குறித்து ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. விரைவில் தங்கள் அமைப்பு உக்ரைனில் நடந்த போரில் மரணம் அடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளது.

latest tamil news

மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை குறித்து ரஷ்யா-உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் அளிக்கும் எண்ணிக்கையை காட்டிலும் உண்மையான எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.