வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டுகள் தடை விதித்த ஆஸ்கர் குழு

ஹாலிவுட்டின் பிரபல நடிகர் வில் ஸ்மித். சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விழாவில் இவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்த விழாவில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடாவின் மொட்டை தலை குறித்து கிண்டல் செய்தார் நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகருமான கிறிஸ் ராக். இதனால் கோபமான வில் ஸ்மித், விழா மேடைக்கு சென்று கிறிஸ் ராக்கின் கன்னத்தில் ஓங்கி பளார் என அறைந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் தனது செயலுக்காக மன்னிப்பு கோரினார் வில் ஸ்மித்.

இருப்பினும் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற சூழல் வந்தபோது ஆஸ்கர் கமிட்டியில் தான் வகித்த பொறுப்பை ராஜினாமா செய்தார் வில் ஸ்மித். இந்நிலையில் இதுதொடர்பாக வில் ஸ்மித்திடம் ஆஸ்கர் குழு நேற்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆஸ்கர் விழாக்களில் பங்கேற்க வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டுகள் தடை விதிப்பதாக ஆஸ்கர் விருதுகள் வழங்கும் அகாடமி குழுவினர் அறிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.