நாளை முதல் மீண்டும் முழு ஊரடங்கு – அரசு அதிரடி முடிவு!

ஊரடங்கு தளர்வுகள் குறித்து அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் அண்டை நாடான சீனாவில், கொரோனா வைரஸ் தொற்றின் நான்காவது அலை கோரத் தாண்டவமாடி வருகிறது. ஒமைக்ரான் வகை தொற்றின் திரிபான பிஏ 2 வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், சீன அரசு திண்டாடி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே, சாஞ்சுன், ஜலின், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில்
முழு ஊரடங்கு
உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவில் கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதற்கிடையே, சீனாவின் பெரிய நகரமான சுமார் 2.6 கோடி மக்கள் வசிக்கும் ஷாங்காயில், கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதால், அமலில் உள்ள
முழு ஊரடங்கு
மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 23 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஷாங்காயில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி உள்ளது.

இம்ரான் கான்.. நீங்க பேசாம இந்தியாவுக்கே போயிருங்க.. நவாஸ் ஷெரீப் மகள் டென்ஷன்!

இந்நிலையில், கொரோனா இரண்டாம் கட்ட பரிசோதனை நடைபெற்ற, அடுத்த 14 நாட்களுக்குள், கொரோனா பாதிப்பு பதிவாகாத இடங்களில் தளர்வுகள் அளிக்கப்படும் என ஷாங்காய் நகர அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் பொது மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஷாங்காயில் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.