இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 1,150 பேருக்கு தொற்று

புதுடெல்லி:

இந்தியாவில் புதிதாக 1,150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.

இதில் அதிகபட்சமாக கேரளாவில் 353, டெல்லியில் 146, மகாராஷ்டிராவில் 130, மிசோரத்தில் 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 30 லட்சத்து 34 ஆயிரத்து 217 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட 75 மரணங்கள் நேற்றைய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதவிர மகாராஷ்டிராவில் 4, கர்நாடகா, டெல்லி, மிசோரம், பஞ்சாபில் தலா ஒருவர் என மேலும் 83 பேர் இறந்துள்ளனர்.

நாட்டில் இதுவரை தொற்று பாதிப்பால் பலியானவர்கள் எண்ணிக்கை 5,21,656 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1,194 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 1 ஆயிரத்து 196 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 11,365 ஆக சரிந்துள்ளது. இது நேற்று முன்தினத்தைவிட 127 குறைவு ஆகும்.

நாடு முழுவதும் நேற்று 14,79,544 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 185 கோடியே 55 லட்சத்தை கடந்துள்ளது.

இதற்கிடையே நேற்று 4,66,362 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 79.34 கோடியாக உயர்ந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.