தெலுங்கில் கால்பதிக்கும் ஐஸ்வர்யா மேனன்

'தமிழ் படம் 2 மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அடுத்து 'நான் சிரித்தால்' படத்தின் மூலம் கவனிக்கப்பட்டார். பல படங்களில் ஹீரோயினாகவும், சிறு சிறு கேரக்டர்களிலும் நடித்துள்ளார். தேசவாலே, நமோ புரோத்தமா கன்னட படங்களில் நடித்தவர் தற்போது தெலுங்கில் கால்பதித்துள்ளார்.

யுவி கிரியேஷன் தயாரிப்பில், தமிழில் வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த கார்த்திகேயா நாயகனாக நடிக்க, பிரசாந்த் இயக்கும் புதிய தெலுங்கு படத்தில் நாயகியாக நடிக்கிறார். அதைத்தொடர்ந்து நிகில் நடிக்க, இயக்குநர் கேரி இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நாயகியாக நடிக்கிறார். இதுதவிர மேலும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். அதுகுறித்த அறிவிப்புகள் வெளிவர இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.