பெட்ரோல், டீசல் விலை உயர்வு – மக்கள் மீது பெருஞ்சுமை ஏற்றிய மத்திய, மாநில அரசுகள் – கமல்ஹாசன் கண்டனம்.!

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு என்பது மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து மக்கள் மீது ஏற்றிய பெருஞ்சுமை என்று, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள டிவிட்டர் செய்திக்குறிப்பில், 

“பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, பன்மடங்கு உயர்த்தப்பட்ட சொத்துவரி உள்ளிட்டவற்றைக் கண்டித்து இன்று மநீம மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. 

விலைவாசியை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசும், மாநில அரசும் தமிழக மக்களைத் தாங்கொணா துயரத்தில் தள்ளி இருக்கின்றன.

தொழில் பின்னடைவு, பொருளாதார நசிவு, வருவாய் இழப்பு என தமிழகம் தத்தளித்து வருகிறது. மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து மக்கள் மீது ஏற்றிய இந்தப் பெருஞ்சுமை உடனடியாக நீக்கப்பட வேண்டும். மக்களின் வாட்டம் போக்கப்பட வேண்டும்”

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.