மத்தியஸ்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு| Dinamalar

கேவாடியா : குஜராத்தில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், மத்தியஸ்தத்தின் முக்கியத்துவம் குறித்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவும் விளக்கிப் பேசினர்.

குஜராத்தின் கேவாடியா மாவட்டத்தில், மத்தியஸ்தம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான இரண்டு நாள் தேசிய மாநாடு நேற்று துவங்கியது. இதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, குஜராத் முதல்வர் பூபேந்திர பாய் படேல் ஆகியோர் பங்கேற்றனர். அந்த விழாவில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஒரு பிரச்னைக்கு தீர்வு காண மத்தியஸ்தம் எவ்வளவு முக்கியம் என்பது குறித்து பேசினார்.

நீதித்துறை அமைப்பில், தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அதே வேளையில், அதை மக்கள் எளிதில் அணுக வழிவகை செய்யவும் அவர் வலியுறுத்தினார். பின் பேசிய தலைமை நீதிபதி ரமணாவும், மத்தியஸ்தத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.