நள்ளிரவு வரை பார்ட்டி சி.சி.பி., போலீசார் அதிரடி| Dinamalar

மாரத்தஹள்ளி : நள்ளிரவு வரை பார்ட்டி நடத்திய, சொகுசு ஓட்டலில் சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையிட்டு, இளம்பெண்கள் உட்பட பலரை கைது செய்தனர்.பெங்களூரு மாரத்தஹள்ளியின், வெளிவட்ட சாலையில் சொகுசு ஓட்டல் உள்ளது. இங்கு தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நபர், பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார்.

நேற்று முன் தினம் நள்ளிரவை கடந்தும், பார்ட்டி தொடர்ந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து நேற்று அதிகாலை, 3:30 மணியளவில் சி.சி.பி., போலீசார், ஓட்டலுக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது பார்ட்டியில் இருந்தவர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 64 இளைஞர்கள், 24 இளம் பெண்களை கைது செய்தனர். இதில் வட மாநிலங்களின் பெண்களே அதிகம்.பார்ட்டியில் போதைப்பொருள் உட்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே பார்ட்டியில் பங்கேற்றவர்களை, போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.எச்.ஏ.எல்., போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.