புதிய கொரோனா தொற்று பற்றி அச்சம் வேண்டாம் – அமைச்சர் சுப்பிரமணியன்

புதிதாகப் பரவிவரும் XE வகை கொரோனா தொற்று பற்றி மக்கள் அச்சப்படத் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மக்கள் பயன்பாட்டுக்கு 2 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களையும் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.