தனுஷின் மாஜி அண்ணியின் 'அந்த' ரகசியத்தை கசியவிட்ட பிரபல நடிகை

செல்வராகவன்
இயக்கத்தில்
தனுஷ்
நடித்த காதல் கொண்டேன் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர்
சோனியா அகர்வால்
. முதல் படத்திலேயே தன் அபார நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து, பின்னர் விவாகரத்தும் செய்தார். கணவரை பிரிந்த பிறகு கெரியரில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார் சோனியா அகர்வால்.

இந்நிலையில் நடிகை சஞ்சனா சிங் தன் அழகிய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை எடுத்தது தன் நெருங்கிய தோழியான சோனியா அகர்வால் என தெரிவித்துள்ளார் சஞ்சனா.

அவரின் ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

சோனியா அகர்வால் ஒரு நல்ல நடிகை என்பது தெரியும். ஆனால் அவர் இவ்வளவு அழகாக புகைப்படம் எடுப்பார் என்பது இத்தனை நாட்களாக தெரியாமல் போய்விட்டது.

சோனியாவுக்குள் இப்படி ஒரு திறமையா என தெரிவித்துள்ளனர்.

செல்வராகவனை பிரிந்தபோது அமைதியாக இருந்த சோனியா அகர்வால், அது குறித்து அண்மையில் தான் மனம் திறந்து பேசியிருந்தார். மேலும் தன் முதல் தமிழ் பட ஹீரோவான தனுஷை பார்த்து தன் அம்மா அதிர்ச்சி அடைந்தது குறித்தும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth:நேத்து தனுஷ், இன்று ரஜினி: மகிழ்ச்சி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.