அமித் ஷாவுக்கு திமுக செம செக் – அமைச்சர் பதவிக்கு ஆபத்து?

அமித் ஷாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்து உள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர்
அமித் ஷா
, “அலுவல் மொழியான ஹிந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்து விட்டது.
ஹிந்தி
மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் போது அது ஹிந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.

அமைச்சர் அமித் ஷாவின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் கண்டங்களைத் தெரிவித்து வருகின்றனர். பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து நாட்டு மக்களை திசைதிருப்பும் நோக்கில் உள்துறை அமைச்சர்
அமித் ஷா
இப்படி பேசியிருப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அரசியல் சாசனத்திற்கு எதிராக பேசிய அமித் ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, தமிழக தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளமான ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து உள்ளதாவது:

அரசியல் சாசனத்திற்கு எதிராக பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அரசியல் சாசனத்திக்கு எதிரான கருத்துகளை ஒரு மத்திய அமைச்சர் பேசுவதை ஏற்று கொள்ள முடியாது. ஒரு மொழி என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஹிந்தியை திணிப்பதற்கு தமிழ்நாட்டில் ஆதரவு கிடையாது.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.