நவகரை பகுதியில் ரயிலில் யானைகள் அடிபட்டு இறந்த இடத்தில் நீதிபதிகள் ஆய்வு

கோயம்புத்தூர் மதுக்கரை அருகே, யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்த இடத்திற்கு சென்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவையில் கடந்த 3 மாதங்களில் மட்டும் உடல் நலக்குறைவாலும், அவுட்டுக்காய் கடித்தும், ரயிலில் அடிபட்டும் என மொத்தம் 11 யானைகள் உயிரிழந்துள்ளன.

இந்நிலையில், நவகரை பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 3 யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்த இடத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார், இளந்திரையன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது விபத்து தொடர்பாகவும், யானைகள் அடிபடுவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கைகள் தொடர்பாகவும் வனத்துறை மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.