அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி நாளை காணொலியில் பேச்சு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி நாளை காணொலி மூலம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

latest tamil news

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: இருநாடுகளிடையேயான உறவை பலப்படுத்துவது, கோவிட்19-ஐ முடிவுக்கு கொண்டு வருவது, உலகபொருளாதாரம், இந்தோ பசிபிக் பகுதி பாதுகாப்பு ,உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஒத்துழைப்பது குறித்து பேச்சுவார்த்தையில் இடம் பெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உக்ரைன் ரஷ்யா இடையேயான போரால் ஏற்பட்டுள்ள சந்தை சீர்குலைவு உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளனர். என வெள்ளை மாளிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

latest tamil news

முன்னதாக கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி, குவாட் தலைவர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் அதிபர் ஜோ பைடனுடன் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.