உக்ரைன் போரின் எதிரொலி..நேட்டோ அமைப்பில் இணையும் இரு நாடுகள்?



நேட்டோ கூட்டமைப்பில் ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து, சுவீடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நிலையில் நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து மற்றும் சுவீடன் நேட்டோ அமைப்பில் இணைய உள்ளதாக அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து நேட்டோ நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக நேட்டோ அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘நேட்டோ அமைப்பு வலுவடையக் கூடாது என உக்ரைன் மீது ரஷ்ய ஜனாபதி புதின் போர் தொடுத்ததின் காரணமாக, அவர் நினைத்ததற்கு மாறாக நேட்டோ வலுவடைந்துள்ளது’ என தெரிவித்தனர்.

இதற்கிடையில் பின்லாந்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ உக்ரைன் மீது ரஷ்யா எடுத்துள்ள ராணுவ நடவடிக்கைகளின் விளைவாகவே நேட்டோ அமைப்பில் இணைவது குறித்து பரிசீலனை செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்’ என தெரிவித்தார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.