சென்னை : கோயம்பேடு அருகே சொகுசு விடுதியில் விபசாரம்.! மீட்கப்பட்ட இளம்பெண்கள்.!

சென்னை : கோயம்பேடு சந்தை அடுத்த சின்மயா நகரில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் விபசாரம் நடப்பதாக காவல் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீசார் அந்த விடுதிக்குள் அதிரடியாக புகுந்து சோதனை மேறன்கொண்டபோது, அங்குள்ள அறையில் அழகிகள் சிலர் வாடிக்கையாளர்களுடன் விபசாரத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனையடுத்து அந்த விடுதி மேலாளர் சீனிவாசன் மற்றும் அழகிகளுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த வாடிக்கையாளர் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது விபசார தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், 30 வயதுக்குட்பட்ட 5 இளம் பெண்களை மீட்டு மைலாப்பூர் அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.