அனைத்து மதுபானசாலைகளும் 13 , 14ஆம் திகதிகளில் மூடப்படும்

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இவ்வாறு அனைத்து மதுபானசாலைகளும் முடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் அனைத்து மதுபானசாலைகள் உரிமையாளர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.