இதுல இவ்ளோ விஷயம் இருக்கா ? விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி..!

விஜய்யின்
பீஸ்ட்
திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகின்றது. இதுவரை படத்திலிருந்து வெளியான போஸ்டர், ட்ரைலர் மற்றும் பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் ரசிகர்களுக்கு ஒரு சின்ன குறை இருந்துவந்தது.

பொதுவாக
விஜய்
படங்கள் என்றாலே இசைவெளியீட்டு விழா சிறப்பாக நடைபெறும். அவ்விழாவில் விஜய்யின் பேச்சை கேட்பதற்காகவே பல ரசிகர்கள் ஆவலாக இருப்பார்கள். ஆனால் பீஸ்ட் படத்தின் இசை வெளியிட்டு விழா ரத்தானது ரசிகர்களை ஏமாற்றமடையே செய்துள்ளது.

நாம் என்றுமே பிரிந்ததில்லை…ஐஸ்வர்யா உருக்கம்..!

இசைவெளியீட்டு விழாவில் விஜய் சொல்லும் குட்டி ஸ்டோரியை கேட்கமுடியாதே என ரசிகர்கள் ஏங்கிப்போனார்கள். ஆனால் அவர்களை குஷிப்படுத்தும் வகையில் விஜய் பத்து வருடங்கள் கழித்து டிவி நேர்காணலில் பங்கேற்றார்.

இயக்குனர்
நெல்சன்
விஜய்யிடம் பல கேள்விகளை கேட்டார். இந்நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரியும் தற்போது செம வைரலாகிவருகின்றது.

விஜய்

புல்லாங்குழல் மற்றும் கால்பந்தை மையமாக வைத்து விஜய் குட்டி ஸ்டோரி கூறியுள்ளார். புல்லாங்குழலை பார்த்து கால்பந்து கேட்டதாம், எனக்குள்ளும் காற்றுதான் இருக்கின்றது உனக்குள்ளும் காற்றுதான் இருக்கின்றது. ஆனால் என்னை அனைவரும் உதைக்கின்றனர். உன்னை உதட்டில் வைத்து முத்தமிடுகின்றனர்.

அது ஏன் என கேட்டதாம் கால்பந்து. அதற்கு புல்லாங்குழல் நீ உனக்குள் இருக்கும் காற்றை யாருக்கும் தருவதில்லை, ஆனால் நான் எனக்குள் இருக்கும் காற்றை இன்னிசையாக மக்களுக்கு தருகின்றேன். அதனால் தான் என்னை அனைவரும் முத்தமிடுகின்றார்கள் என்றதாம்.

விஜய்

எனவே நாம் கால்பந்து போல இல்லாமல், புல்லாங்குழலாக மாறவேண்டும் என விஜய் கூறினார். ப்ரோமோவில் குட்டி ஸ்டோரி ஸ்டாக் இல்லை என்று சொல்லிவிட்டு இவ்வளவு அருமையான தத்துவ கதையை விஜய் கூறியுள்ளது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் யை INSPIRE செய்த பூஜா… நெல்சன் கலாய்… கல… கல… INTERVIEW

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.