வருத்தத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் பட நாயகி

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக டான் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தநிலையில் தற்போது முதன்முதலாக தெலுங்கு திரையுலகிலும் நுழைந்துள்ள சிவகார்த்திகேயன் ஜதிரத்னாலு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் இருபதாவது படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியபோஷப்கா என்பவர் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருவது குறித்து தனது சந்தோசத்தையும் அதே சமயம் தனது மன வருத்தத்தையும் ஒருசேர வெளிப்படுத்தியுள்ளார் மரியா ரியபோஷப்கா.

வருத்தத்திற்கு காரணம் தற்போது அவரது சொந்த நாடான உக்ரைனில் நிலவும் சூழல் தான். சொந்த ஊரை பிரிந்து வந்து பல நாட்கள் ஆகிறது என்றும் அதே சமயம் தற்போது நிலவும் போர்ச்சூழலும், மக்கள் படும் கஷ்டமும் தன்னை வருத்தத்திற்கு உள்ளாக்கி இருப்பதாகவும் கூறியுள்ளார் மரியா. அதேசமயம் சிவகார்த்திகேயன் படத்தில் நடிப்பதன் மூலம் இயக்குனர் அனுதீப், சிவகார்த்திகேயன் போன்ற சுவாரசியமான மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.