மத்திய பல்கலை.யில் நுழைவுத்தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: மத்திய பல்கலைக் கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். மாநில அரசின் உரிமையை நிலைநாட்ட மத்திய பல்கலை. நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் முன்மொழிக்கப்பட்டது. மாநிலத்தின் கல்வி உரிமை மீது ஒன்றிய அரசின் தாக்குதல் தொடர்கிறது என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.