நானே வருவேன் படப்பிடிப்பு நிறைவு : வாத்திக்கு கிளம்பும் தனுஷ்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் ' நானே வருவேன் '. இந்துஜா, எல்லி அர்வம் நடிக்கும் இந்த படத்தை தாணு தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. காரில் ஒன்றில் உற்சாகமாக படுத்தப்படி போஸ் கொடுத்துள்ள போட்டோவை பகிர்ந்து நானே வருவேன் படப்பிடிப்பு நிறைவடைந்தது என தெரிவித்துள்ளார் தனுஷ்.

இதையடுத்து தனுஷின் அடுத்த நேரடி தெலுங்கு படமான “வாத்தி '' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்க உள்ளது. இதில் தனுஷ் பங்கேற்க உள்ளார். தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.