ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது குஜராத்

மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற  21-வது லீக் ஆட்டத்தில் ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும்,  வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற ஐதராபாத்  அணி  பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர் மத்தீவ் வேட் 19 ரன்னிலும், சுப்மன் கில் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 
சாய் சுதர்சன் 11 ரன்களில் விக்கெட்டை பறி கொடுத்தார். எனினும் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பொறுப்புடன் விளையாடி 42 பந்துகளில் அரை சதம் அடித்தார். மற்றொரு வீரர்  அபினவ் மனோகர் 35 ரன்கள் எடுத்தார். 
இறுதியில்  குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி விளையாடி வருகிறது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.